ஜனாதிபதியுடன் பேசிய பின், புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்
எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் முஸ்லிம் உலமா கட்சிக்குமிடையிலான சந்திப்பு இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடை பெற்றது. ஐ.ம.சு. முன்னணி சார்பில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க ஆகியோரும் உலமா கட்சி சார்பில் அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி, உப தலைவர் மௌலவி காரி ரஸீன் கபூரி, பொருளாலர் எம். அர்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது எதிர்வரும் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியுடன் உலமா கட்சி இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உலமா கட்சியால் கையளிக்கப்பட்டது. அதில் மௌலவி ஆசிரிய வெற்றிடம் நிரப்பப்பட வேண்டும், பள்ளிவாயல்களில் பணி புரியும் இமாம், முஅத்தின்களுக்கு அரச சம்பளம் வழங்குதல், கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய தேர்தல் மாவட்டம் என்பன முக்கிய கோரிக்கைகளாக முன் வைக்கப்பட்டன.
Latchakanakkana vaakku wangiyai konda katchi udan pecchu
ReplyDeleteஅப்போ மஹிந்த
ReplyDelete