Header Ads



பாரிய அர­சியல் சூழ்ச்­சி­தா­ரர்கள் உள்­ளனர், பின்னணியில் பாரிய குற்றவாளிகள்

லிட்ரோ சமையல் எரி­வாயு நிறு­வ­னத்தின் தலைவர் ஷலீல முன­சிங்­கவின் பின்­ன­ணியில் பாரிய அர­சியல் சூழ்ச்­சி­தா­ரர்கள் உள்­ளனர், லிட்ரோ சமையல் எரி­வாயு நிறு­வ­னத்தின் தலைவர் ஷலீல முன­சிங்­கவின் பின்­ன­ணியில் ரவி கரு­ணா­நா­யக்க சம்­பந்­தப்­பட்­டுள்­ள­தாக மக்கள் விடு­தலை முன்­னணி குற்றம் சுமத்­து­கின்­றது. சர்­வ­தேச நிதி­யினை விசா­ர­ணை­யின்றி வங்கி பரி­மாற்றத்துக்கு அனு­மதி கொடுத்­தது யார்? லிட்ரோ சமையல் எரி­வாயு நிறு­வ­னத்தின் தலை­வ­ராக்­கி­யது யார் என்­பதை கண்­ட­றிய வேண்டும் எனவும் அக்­கட்சி குறிப்­பிட்­டது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற போது கட்­சியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

முன்­னைய அர­சாங்கம் இலங்­கையில் பணத்­தினை கொள்­ளை­ய­டித்து சர்­வ­தேச வங்­கி­களில் சேக­ரித்த குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது. இந்த அர­சாங்கம் சர்­வ­தேச வங்­கி­களில் இருந்து பணத்­தினை கொள்ளை­ய­டித்து இங்கு சேர்க்­கின்­றனர். ஆக இந்த இரண்டு அர­சாங்­கமும் வங்கி விட­யத்தில் ஒடு­மை­யாக உள்­ளனர்.

எனினும், சர்­வ­தேச ரீதி­யி­லான பாரிய நிதி மோச­டி­யாகும். இதில் அந்த நாட்டின் சட்­டத்­துக்கும் நாம் கட்­டுப்­பட வேண்டும். ஆனால், இப்­போது கைது செய்­யப்­பட்­டுள்ள லிட்ரோ சமையல் எரி­வாயு நிறு­வ­னத்தின் தலைவர் ஷலீல முன­சிங்க முன்னாள் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் நெருங்­கிய நண்பர். இவரை லிட்ரோ சமையல் எரி­வாயு நிறு­வ­னத்தின் தலை­வ­ராக்­கி­யது யார் என்­பதை கண்­ட­றிய வேண்டும். அதேபோல் இவ்­வ­ளவு தொகை­யினை விசா­ர­ணை­யின்றி வங்கி பரி­மாற்ற அனு­மதி கொடுத்­தது யார் இப்­போதும் அவர் லிட்ரோ சமையல் எரி­வாயு நிறு­வ­னத்தின் தலை­வ­ராக உள்ளார். உடனடியாக இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதில் ஒரு சிலர் மட்டுமே தொடர்பு பட்டவர்கள் அல்ல. இதன் பின்னணியில் பாரிய குற்றவாளிகள் உள்ளனர். அவர்களை கண்டறிய வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.