ரோஹின்யர்கள் தாக்கப்பட்ட விவகாரம் - தேடப்பட்டுவந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சரண்
மியான்மார் றோகிஞ்சா அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கல்கிஸையில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், தேடப்பட்டுவந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடடைந்துள்ளார்.
கடமையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ள, பொலிஸ் கான்ஸ்டபிள், ஷானக குணதிலக என்பவரே இவ்வாறு சரணடைந்துள்ளார். இவர், வாதுவையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சரணடைந்த சந்தேகநபரை, கல்கிஸை நீதிமன்ற நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பிரிவு அறிவித்துள்ளது.
Post a Comment