Header Ads



என் மகனை தீயில் வீசிவிட்டு, என்னை கற்பழித்தனர் - மியன்மார் ராணுவத்தினரின் கொடூரம்


மியான்மரில் ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிரான வன்முறையில் ராணுவத்தினரால் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டும், பெண்கள் கற்பழிக்கப்பட்டும் கொடூரத்தை அனுபவித்தினர்.

லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்துவருகின்றனர்.

சமீபத்தில் கூட தான் பெற்ற பிள்ளையை கையில் ஏந்திக் கொண்டு கதறும் பெற்றோரின் புகைப்படமும், பள்ளிச்சீருடையுடன் தங்கையை தோளில் சுமந்து கொண்டு அகதியாய் நடக்கும் சிறுவனின் புகைப்படம் வைரலானது.

இந்நிலையில் Rajuma Begam என்ற பெண் ராணுவத்தினரால் தான் அனுபவித்த கொடுமைகள் பற்றி அல்ஜசீராவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அன்றைய தினம் என் மடியில் அமர்ந்திருந்த என்னுடைய மகன் Sadiq-கை(வயது 1 1/2) மிக கடுமையாக தாக்கினார்கள்.

சுவற்றில் அடித்து அவனை கொடுமைப்படுத்தி தீயில் தூக்கி எரிந்தனர் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Rajuma Begam-த்தின் பெற்றோர் உட்பட இரண்டு சகோரிகள் மற்றும் சகோதரரையும் ராணுவத்தினர் கொன்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.