Header Ads



இது இறுதி பஸ் வண்டியாகும், இதை தவறவிடக்கூடாது...!!

இனவாதிகள் மதவாதிகள் போன்ற அற்ப சிந்தனையாளர்கள் நாட்டை தீயிடுவதற்கு இடம் அளிக்கக்கூடாது என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இனவாதிகள் மதவாதிகள் போன்ற அற்ப சிந்தனையாளர்கள் நாட்டை தீயிடுவதற்கு இடம் அளிக்ககூடாது. இது தொடர்பில் உள்ள பிரச்சனைகளை கலந்துரையாட வேண்டும்.

புதிய அரசியல் அமைப்பிற்கான இடைக்கால அறிக்கையில், பௌத்த மதத்திற்கான உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இது இறுதி பஸ் வண்டியாகும். இதை தவறவிடக்கூடாது.

இலங்கை வரலாற்றில் பாரிய சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பிரச்சனையை தீர்ப்பதற்கு நாடாளுமன்றில் இவ்வாறான சந்தர்ப்பம் கிட்டாது. இது இறுதி சந்தர்ப்பமாகும் என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.