Header Ads



சூடாக ஆரம்பித்து, சுமூகமாக முடிவடைந்த முஸ்லிம் - பொதுபல சேனா பேச்சு

-AAM. Anzir-

பொதுபல சேனாக்கும்,  முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான 4 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை நேற்று (23) திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றுள்ளது.

வில்பத்துவில் முஸ்லிம்கள் காணிகளை அழிப்பதாக சிங்கள தரப்பில் மேலோங்கிய நச்சுப் பிரச்சாரம் தொடர்பில், பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் நவ்பள் மிக விரிவான விளக்கமொன்றை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பிலான பேச்சு ஆரம்பமாகியபோது, கடும் வாதப்பிரதி வாதங்கள் நடந்துள்ளன.

நேற்றைய பேச்சில் பொதுபல சேனா தரப்பிலிருந்து, அதிகமானவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தெளிவான மற்றும் ஆதாரமான தகவல்களை முஸ்லிம் தரப்பினர் வில்பத்து  தொடர்பிலும் அதற்கு அருகாமையில் குடியேறியுள்ள மக்கள் தொடர்பிலும் வழங்கினர். இதனால் பொதுபல சேனா தரப்பினர் திருப்தியடைந்துள்ளனர்.

இதையடுத்து பொதுபல சேனா தரப்பிலிருந்து, வில்பத்து பற்றியும், அதற்கு அண்மையில் குடியேறியுள்ள முஸ்லிம்கள் சம்பந்தமாகவும் செய்துவந்த போலி பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது

நேற்று மாலை 7 மணிக்கு ஆரம்பமான இப்பேச்சுவார்தஇதை இரவு 10 மணிவரை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. making a historical mistake by talking to them. nothing good will come out.

    ReplyDelete
  2. இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் நல்லதாக முடியட்டும். மேலும் எங்களது ஜம்மியத்துல் உலமா சபைக்கும், எங்கள் சமூக தொண்டர்கள் மற்றும் அரசியல் வாதிகளுக்கும் அல்லாஹ்வின் உதவி இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கட்டும். தொடர்ந்து உங்களது பணிகளை மேட்கொள்ளுங்கள்.பொறாமைக்காரர்கள், எரிச்சல்காரர்கள்,அறிவிழிகள் பலதும் சொல்லி உங்களது பணிகளை குழப்பப் பார்ப்பார்கள்.அவற்றை கணக்கெடுக்காமல் உங்களது பணியை தொடருங்கள்.அல்லாஹ் உங்களது கஷ்டநஷ்டங்களை தீர்த்துவைப்பானாக

    ReplyDelete
  3. அரசியல்வாதிகளுக்கு அல்லாஹ் நேர் வழியை காட்டுவானாக... இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் குறுக்கு வழி மாத்திரமே...

    ReplyDelete
  4. Jaw Jaw is better than war war. Dialogue is much praiseworty move to alleviate misgivings arising out of jeolosy n rancour of Budhist hardliners towards Muslims.
    May Allah SWA grant His nercy on Our ACJU , political leaders n whoever is involved .
    We never know what wisdom of Allah behind this backlash.
    Saburan Jameelan.
    Forebearancec wil b rewarded as a Blessing in disguise.Allah knows best.

    ReplyDelete
  5. போலிப்பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவார்கள். உண்மையான பிரச்சாரத்தை இனிமேல்தான் ஆரம்பிக்கப்போகிறார்கள் !
    மகாநாயக்கர்களின் அறிக்கை ஒண்று வரும் அப்போ பாருங்கள்!

    ReplyDelete
  6. Why not Muslim Delegation insist to include Representatives of Malwatte Nayaka Theros, other Buddhist organisations, and racist group such as Sihala, Mahasona, Ravana, etc. also to this discussion.????????????????

    ReplyDelete
  7. கடைசியில் முஸ்லீம்களை தனித்தராப்பாக. பொதுபலசேனா ஏற்று பேச்சு.

    ReplyDelete

Powered by Blogger.