Header Ads



முஜிபுர் ரஹ்­மா­னுக்கு, பொதுபல சேனா சவால்

-MM.Minhaj-

மியன்மார் தூத­ர­கத்­திற்கு சென்று சண்­டித்­தனம் காண்­பித்த முஜிபுர் ரஹ்­மா­னுக்கு சீன, அமெ­ரிக்க, பிரித்­தா­னிய தூத­ர­கங்­க­ளுக்கு சென்று சண்­டித்­தனம் காண்­பிக்க முடி­யுமா? என பொது பல சேனா அமைப்பு சவால் விட்­டது.

அத்­துடன் அம்­பாந்­தோட்டை ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டோ­ருக்கு ஒரு சட்டம், மியன்மார் தூத­ர­கத்­திற்கு சென்று போரா­டி­ய­வர்­க­ளுக்கு வேறு சட்­டமா என்றும் அவ்­வ­மைப்பு கேள்வி எழுப்­பி­யது.

இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள பொது பல சேனா அமைப்பின் காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவ்­வ­மைப்பின் நிர்­வாக பணிப்­பாளர் டிலந்த விதா­னகே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு டிலந்த விதா­னகே மேலும் குறிப்­பி­டு­கையில்,

நிதி ஒதுக்­கீட்டு சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் பாது­காப்பு அமைச்­சிற்கு அதிக நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­கின்­றது. யுத்தம் நிறை­வ­டைந்தும் அதற்கே அதிக நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­கின்­றது. நாட்டின் போக்­கு­வ­ரத்து ,சுகா­தாரம் சீர்­கு­லைந்­துள்­ளன. எனினும் அது தொடர்­பில் அவ­தானம் செலுத்­தப்­ப­டு­வது குறைவு. 

அத்­துடன் தற்­போது அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் எவ­ருக்கும் புரிந்­து­ணர்வு கிடை­யாது. இந்­நி­லையில் இது­வ­ரைக்கும் வரவு – செலவின் துண்­டு­விழும் தொகையை சீர் செய்ய முடி­யா­த­வர்கள் எப்­படி அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக பிரச்­சினை தீர்க்க போகின்­றார்கள். 

மியன்மார் தூத­ர­கத்­திற்கு சென்று சண்­டித்­தனம் காண்­பித்த முஜிபுர் ரஹ்­மா­னுக்கு சீன, அமெ­ரிக்க, பிரித்­தா­னிய தூத­ர­கங்­க­ளுக்கு சென்று சண்­டித்­தனம் காண்­பிக்க முடி­யுமா?

அத்­துடன் அம்­பாந்­தோட்டை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு ஒரு சட்டம், மியன்மார் தூதரகத்திற்கு சென்று போராடியவர்களுக்கு வேறு சட்டமா என்றும் அவ்வமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

No comments

Powered by Blogger.