பஷிலை விட்டுக்கொக்க மறுக்கும் ராஜித்த
பஷில் ராஜபக் ஷ கூறிய விடயங்களை அன்று செவிமடுத்திருந்தால் மஹிந்த ராஜபக் ஷ இன்றும் ஆட்சியில் இருந்திருப்பார். ஆனால் மஹிந்த, கோத்தபாய கூறியவற்றை கேட்டதன் காரணமாகவே இன்றைய நிலை ஏற்பட்டது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். சர்வதேசத்திற்குள்ளேயே இலங்கை இருக்கின்றது.
என்பதை புரிந்து பசில் ராஜபக்ச செயற்பட்டார். அதனைப் புரிந்துகொள்ளக் கூடிய ஒரே ராஜபக்சவாக பசில் காணப்பட்டார். ஆனால் அவர் கூறியவற்றை மகிந்த கேட்கவில்லை. மகிந்த கோத்தா கூறியவற்றையே கேட்டுக்கொண்டிருந்தார். அதனால்தான் இந்த நிலை ஏற்பட்டது என்றும் அமைச்சர் ராஜித்த சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
கேள்வி: வடக்கில் காணிகளைக் கோரி மக்கள் போராடி வருகின்றனர். எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அண்மையில் வடக்கிற்கு சென்றிருந்த பசில் ராஜபக்ச காணி விடுவிப்புக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லையென தெரிவித்திருந்தார். இது தொடர்பில்?
பதில்: காணி விடுவிப்புக்கு மகிந்த அணியில் பசில் ராஜபக்ச எதிர்ப்பு இல்லை என்று தெரிவித்தமை வரவேற்கத்தக்கது. இது ஒரு நல்ல கூற்று இதன் பின்னர் வடக்கு மக்களின் காணிகளை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விடுவிக்கலாம் எனக் கருதுகின்றோம்.
காணி விடுவிப்புக்கு மகிந்த அணியினரே தடையாக இருந்து வந்தனர். தற்போது பசில் ராஜபக்ச கூறியுள்ள விடயம் எமக்கு உற்சாகத்தை தருகிறது. பசில் ராஜபக்ச கூறிய விடயங்களை அன்று கேட்டிருந்தால் மகிந்த ராஜபக்ச இன்றும் ஆட்சியில் இருந்திருப்பார். ஆனால் மகிந்த கோத்தபாய கூறியவற்றை கேட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது.
சர்வதேசத்திற்குள்ளேயே இலங்கை இருக்கின்றது என்பதை புரிந்து பசில் ராஜபக்ச செயற்பட்டார். அதனைப் புரிந்துகொள்ளக் கூடிய ஒரே ராஜபக்சவாக பசில் காணப்பட்டார். ஆனால் அவர் கூறியவற்றை மகிந்த கேட்கவில்லை. மகிந்த கோத்தா கூறியவற்றையே கேட்டுக்கொண்டிருந்தார். அதனால்தான் இந்த நிலை ஏற்பட்டது. பசில் கூறியதை கேட்டிருந்தால் இன்றும் மகிந்த ஆட்சியில் இருந்திருப்பார்.
கேள்வி: காணாமல் போனோர் தொடர்ந்து போராட்டங்களை நடத்துகின்றனர். இதற்குத் தீர்வு இல்லையா?
பதில்: நானும் இந்தப் போராட்டம் நடத்தும் காணாமல்போனோரின் உறவினர்களை சந்தித்துப் பேச்சு நடத்தினேன். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. தமது உறவினர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்பதையே அவர்கள் தெரிவிக்கின்றனர். அவை கண்டறியப்பட வேண்டும். அந்த நிலைப்பாட்டிலேயே நானும் இருக்கின்றேன்.
பஷிலும், ராஜித்தவும் சிறந்த நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment