Header Ads



சாய்ந்தமருது பிரிக்கப்பட்டு கல்முனை முஸ்லிம்களிடமிருந்து கைநழுவிப் போவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது - ஹரீஸ் சூளுரை

கல்முனை மாநகர சபை நான்கு உள்ளூராட்சி பிரதேசங்களாக பிரிக்கப்படும் வரை சாய்ந்தமருதுவுக்கான தனியான உள்ளூராட்சி சபையை அனுமதிக்கப் போவதில்லை எனவும், இவ்விடயத்தில் தனது அரசியல் வாழ்வு இழக்கப்பட்டாலும் கவலைப்படப் போவதில்லையென்றும் பிரதியமைச்சர் ஹரீஸ் சூளுரைத்துள்ளார்.

சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை ஸ்தாபித்தல் தொடர்பாக கல்முனைக்குடி பள்ளிவாசல் முக்கியஸ்தர்கள், ஊர்ப் பிரமுகர்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். கல்முனை ஆஸாத் பிளாஸாவில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய அவர்:

எனது இத்தீர்மானத்தில் சாய்ந்தமருது பிரதேச 18,000 வாக்குககளை இழந்தாலும் அதுபற்றி கவலைப்படப்போவதில்லை. ஒருபோதும் சாய்ந்தமருதுவுக்கான தனியான உள்ளூராட்சி சபையை உருவாக்க இடமளியேன்.

கல்முனை மாநகர சபையில் இருந்து, சாய்ந்தமருது பிரிக்கப்பட்டு கல்முனை மாநகரம் முஸ்லிம்களிடமிருந்து கைநழுவிப் போவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி சபையை வழங்கக் கூடாதென அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, ரவூப் ஹக்கீம், றிஸாட் பதியுதீன் மற்றும் பிரதமர் ரணிலுடனும் கேட்டுள்ளேன். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் எனது தலைமையில் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கல்முனையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக ஏற்படுத்தும் நோக்கில் அக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தியுள்ளேன் என்றார்.

பிரதியமைச்சரின் இவ்வுரை சாய்ந்தமருது பிரதேசங்களில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டதுடன் முக நூல்களிலும் பதிவிடப்பட்டன.

3 comments:

  1. ஹரீஸ் ஒரு லைசென்ஸ் எடுக்காத கோமாளி ...........

    இதைதானாடா அதாவுல்லா அழகாக எல்லைப்பிரித்து கொண்டுவந்த அதே விடயத்தை உங்கள் நல்லாட்சியில் மூன்று வருடம் கழித்து போராட வெட்கம் இல்லையா. இவனுக்கு முன்புத்தியும் இல்லை பின்புத்தியும் இல்லை....இவருக்கு பின்னால் ஒரு கூட்டம்..... சமூக அக்கறையாம்.
    சமூக அக்கறை பற்றி அறிய குறைந்தது மனோ கணேசனின் காலை கழுவி குடிங்கோ........ சில நேரம் புத்தி வந்தாலும் வரும் இக்கோமாளிக்கு.

    ReplyDelete
  2. சிறந்த அறிவிப்பு. பிரதேசவாதம் பேசும் முஸ்லிம்களே நீங்கள் சுகம் காண இன்னொரு முஸ்லிம் சமுதாயத்தை தமிழ் அடிப்படைவாதிகளிடம் அடிமையாக்கி துரோகம் இழைத்துவிடாதீர்கள்

    ReplyDelete
  3. ஹரீஸ் உள்ள வரை சாய்ந்தமருதுக்கு கஷ்டம்தான்

    ReplyDelete

Powered by Blogger.