Header Ads



புதிய அரசியலமைப்பு மூலம், தேசிய ஐக்கியம் இல்லாமல் போய்விடும் - அத்துரலியே ரதன தேரர்

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகள் மூலம் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் முற்றாக இல்லாமல் போகும் எனவும் இதனால், தாம் இதனை முற்றாக எதிர்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமான வாக்கெடுப்பில் தான் அதற்கு எதிராக வாக்களிக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரதன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கை குழுவின் இடைக்கால அறிக்கை ஒத்திசையாத ஆவணம் எனவும் இதனால், முழு நாடும் சிக்கல் நிறைந்ததாக மாறிவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.