Header Ads



நேற்றிலிருந்து புதிய, அடையாள அட்டை


ஆட்பதிவு திணைக்களம் 45 வருடங்களின் பின்னர் புதிய அடையாள அட்டையை அறிமுகம் செய்துள்ளது.

நேற்றைய தினத்திலிருந்து புதிய ஆள் அடையாள அட்டைகள் வழங்கப்படுவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இது ஸ்மார்ட் காட் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவரினதும் உடல் சார்ந்த தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் இந்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் கூறினார்.

தற்போதுள்ள தேசிய அடையாள அட்டை நல்ல நிலைமையில் இருந்தால், அவர்கள் புதிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அடையாள அட்டை வெளியிடும் நிகழ்வு நாளை அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தலைமையில் நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.