ரஞ்சனை உயர்நீதிமன்றத்தில், ஆஜராகுமாறு நோட்டீஸ்
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில், மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி ஊடகங்களிடம் கருத்து வௌியிட்ட ரஞ்சன்,
இந்த நாட்டில் பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என குறிப்பிட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறியமையானது, மக்களுக்கு சட்டம் தொடர்பில் இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வாய்ப்புள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால், நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கமைய, விடயங்களை ஆராய்ந்த நீதவான்கள், எதிர்வரும் 25ம் திகதி ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என, நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Post a Comment