Header Ads



ஜனாதிபதிக்கு எதிராக, கறுப்புக் கொடி

ஜனா­தி­ப­தி மைத்திரிபால சிறிசேனவின் வரு­கையை எதிர்த்து  கறுப்­புக்­கொடிப் போராட்டம் நடத்தும் வகையில் இன்று காலை 9.30 மணிக்கு  யாழ்.பல்­க­லைக்­க­ழக முன்­றலில் ஒன்று கூடு­மாறு அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தும் பொது அமைப்­புக்­க­ளினால் மக்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தி வடக்கில் தொடர்ச்­சி­யான பல போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு  வரு­கின்­றன. தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­கு­கள்  வவு­னியா நீதி­மன்­றத்தில் இருந்து அனு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­றப்­பட்­டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மூன்று தமிழ் அர­சியல் கைதி­க­ளினால் 18 ஆவது நாளாக தொடர்ச்­சி­யான  உண்­ணா­வி­ரதப் போராட்­டம்  மேற்கொள்ளப்பட்டு வரு­கி­றது. 

இவர்­களின் கோரிக்­கையை நிவர்த்­தி­செய்யக் கோரி தொடர் போராட்­டங்கள் நடை­பெற்று வரு­கின்ற வேளையில் இன்­றைய தினம் பல்­வேறு நிகழ்­வு­களில் கலந்து கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி மற்றும் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளமையினை எதிர்க்கும் வகையிலேயே இவ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.