Header Ads



ஹர்த்தால் போராட்டத்துக்கு கல்முனை, பள்ளிவாசல்கள் சம்மேளனம் அழைப்பு

(எஸ் .எல். அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேசத்தில் நாளை  புதன் மற்றும்  நாளை மறுநாள்  வியாழன்  ஆகிய தினம்களில் கடையடைப்பு, மற்றும் ஹர்த்தால் போராட்டத்துக்காக  கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம்  அழைப்பு விடுத்துள்ளது .

கல்முனை மாநகரசபையை 1987ஆம் ஆண்டு கலப்பகுதில் காணப்பட்டதனை போன்று நான்கு உள்ளுராட்சி சபைகளாகப் பிரித்து, முன்னர் கல்முனை பட்டிண சபையாக இருந்த பிரதேசத்தினை  கல்முனை மாநகர சபையாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என  அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்த  ஹர்த்தால் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனம்களின் சம்மேளனத்தின் தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.ஏ. அஸீஸ் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.