புத்தளம் சாஹிரா கல்லூரி வீரர், அகில இலங்கை ரீதியில் சாதனை
தேசிய மெய்வல்வலுனர் போட்டியின் நிறைவு நாள் போட்டி (15.10.2017) கொட்டாவ தியகம விளையாட்டரங்கில் இடம் பெற்ற போது புத்தளம் சாஹிரா கல்லூரி மாணவன் ஏ.எம்.அப்ரித் 17 வயதின் கீழ் உயரம் பாய்தல் போட்டியில் 2 ஆம் இடத்தைப் (Runner up) பெற்று சாதனைப் படைத்துள்ளார். ماشاء الله
இதன் மூலம் இவர் சாஹிரா கல்லூரிக்கு மாத்திரமன்றி புத்தளம் கல்வி வலயம், புத்தளம் மாவட்டம் மற்றும் வடமேல் மாகாணத்துக்கே புகழ் சேர்த்துள்ளார்.الحمد لله
இவர் சாஹிரா கல்லூரியின் E-Tech முதலாம் வருட மாணவர். புளிச்சாக்குளத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.
Mohamed Muhsi
Post a Comment