ஜமாத் சென்றவர், நீரில் மூழ்கி வபாத் - கந்தளாயில் சம்பவம்
கந்தளாய் பிரதேசத்திற்கு மார்க்க கல்வியை கற்பதற்காக ஜமாத் கடமைக்கு வருகை தந்திருந்த இளைஞர்கள் குளத்திற்கு குளிக்க சென்ற வேளை நீரில் மூழ்கி இன்று (12) காலை இளைஞனொருவர் வபாத்தாகியுள்ளதாக கந்தளாய் தலைமயை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கல்முனை-பாண்டியிருப்பு பகுதியைச்சேர்ந்த முகம்மட் ஜவ்பர் பாஹீம் முகம்மட் (20வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த இளைஞனின் ஜனாஸா கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(ஹஸ்பர் ஏ ஹலீம்)
Post a Comment