Header Ads



உயிர் உள்ளவரை, கையெழுத்திடப் போவதில்லை - கரு


நாட்டை பிளவு படுத்தும் வகையிலான புதிய அரசியலமைப்பில் தான் உயிரோடு உள்ளவரை ஒருபோதும் கையெழுத்திடப் போவதில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

தான், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு திருத்தத்தை  இதுவரை பார்வையிடவில்லை என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் எவ்வாறான யோசனைகளும் முன்வைக்கப்பட்டாலும் தான் கையெழுத்திட்டால் மட்டமே அது அரசியலமைப்பாகும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.