Header Ads



பாகிஸ்தானில் விளையாடுவதா? இலங்கை வீரர்களே தீர்மானிக்க வேண்டும் - பலவந்தப்படுத்த முடியாது


பாகிஸ்தான் லாஹூர் நகரில் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருவது போட்டியில் விளையாடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை அணியின் வீரர்களே தீர்மானிக்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் , லாஹுரில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் கலந்து கொள்ளுமாறு வீரர்களை பலவந்தப்படுவத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது குமார் சங்கக்கார இதனை தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு மார்ச் மாதம் 03ம் திகதி பாகிஸ்தான் லாஹூர் நகரில் இலங்கை அணி பயணித்த பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் போது சங்கக்காரவும் குறித்த பேரூந்தில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. LTTE இன் பயங்கரவாதம் இலங்கையில் இருந்தபோது பாகிஸ்தான் வீரர்கள் இலங்கை வந்து விளையாடினார்கள்.
    அதுபோல் இலங்கை வீரர்களும் பாகிஸ்தானில் விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.