Header Ads



பசில் ராஜபக்ச, அமெரிக்காவுக்கு ஓடிவிடுவார் - அமைச்சர் பீ.ஹரிசன்

பசில் ராஜபக்சவின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது என கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு இன்றைய தினம்(13) விஜயம் செய்த அமைச்சர் அங்கு அமைக்கப்பட்டுள்ள கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையத்தை திறந்து வைத்தார்.

இதன் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது“கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ச வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலில் 200 ஆசனங்களைப் பெறுவோம் என்று கூறியுள்ளார். இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன” என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பசில் ராஜபக்ச இவ்வாறுதான் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பகல் கனவு கண்டார். தாங்கள் தான் பத்து வருடத்துக்கு ஜனாதிபதி என்றெல்லாம் கூறினார். ஆனால் இறுதியில் என்ன நடந்தது.

வடக்கு,கிழக்கு உட்ப்பட நாடு முழுவதிலும் உள்ள மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் இணைந்து நல்லதொரு ஆட்சியை அமைத்தனர்.

அதன் பின்னர் பசில் ராஜபக்ச என்ன செய்தார். அமெரிக்காவுக்குதான் ஓடினார், அதேபோல்தான் உள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்ததும் அவர் அமெரிக்காவுக்கு ஓடிவிடுவார் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, அவரது பகல் கனவுகள் ஒருபோதும் பலிக்காது என்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.