ஜனாஸா அறிவிப்பு - முகம்மது சியாத்
அஸ்ஸலாமு அலைக்கும்.
யாழ்,சோனகதெரு, நாவலர் வீதியைச்( கலீபா அப்துல் காதர் வீதி ) சேர்ந்த முகம்மது சியாத் நீர்கொழும்பில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பாத்திமா சாபியாவின் கணவரும், ஸம்ஸம், ரோஷன் (அர்ஷத் டெயிலர்ஸ், நீர்கொழும்பு) பாத்திமா சப்னா ஆகியோரின் தகப்பனாரும், பாத்திமா அஹ்மதா மற்றும் மர்ஹூம்களான சாலிஹா, ஹமீதா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று ( 15/10/2017 ) அஸர் தொழுகையின் பின் நீர்கொழும்பு, பெரியமுல்ல,முஸ்லிம் மையவாடியில் இடம்பெறும்.
கல்கட்டுவ வீதி,செல்லகந்த,நீர்கொழும்பு.
Post a Comment