மட்டக்களப்பு உயர் தொழிநுட்பவியல், நிறுவக புதிய கட்டிடம் திறந்து வைப்பு!
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழினுட்ப கல்வியினை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு தாழங்குடாவில் அமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம் (ATI)யின் புதிய கட்டிடம் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் இன்று சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இவ் வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மிக நீண்ட கால தேவையாக கறுதப்பட்ட உயர் தொழில் நுட்பவியல் கல்லூரிக்கான புதிய கட்டிடம் இராஜாங்க அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(முகம்மட் சஜீ)
Post a Comment