Header Ads



ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட, கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ரணில்

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் வைத்து பிரதமர் இதனை தெரிவித்தார்.

கடந்த 20 வருடம் ஆட்சி நடத்தியவர்கள் எதனையும் செய்யாத நிலையில் இன்னும் அவகாசம் வழங்க முடியாது.

பத்து ரூபாய்க்கு வேலை செய்து நூறு ரூபாய்க்கு கணக்குகளை காட்டும் அரசாங்கம் ஒன்றே கடந்த காலத்தில் இருந்தது.

எனவே அரசியல் சூழலில் மாற்றங்கள் ஏற்பட உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

2 comments:

  1. இவண்ட poto போடவேண்டாம்.

    ReplyDelete
  2. கட்சி கடும் நஷ்டத்தில் ஓடுதோ?

    ReplyDelete

Powered by Blogger.