‘பாராளுமன்றில் குண்டுவீசப்பட வேண்டும்’ என்று கூறிய விமல் வீரவன்ச மீது நடவடிக்கை
‘பாராளுமன்றில் குண்டுவீசப்பட வேண்டும்’ என்று கூறிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் இடமாக விளங்கும் பாராளுமன்றத்தில் குண்டு வீசப்பட வேண்டும் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
“எனவே, இத்தகைய ஒரு அச்சுறுத்தலை விடுத்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது இக்கருத்து பற்றி விவாதிக்கப்படும்.”
இவ்வாறு அவ்வறிக்கையில் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
Post a Comment