Header Ads



துரோகிகளால் கட்டப்பட்ட செங்கோட்டையில் மோடி, கொடி ஏற்றலாமா..? உவைசியின் அதிரடிக் கேள்வி


பாரதீய ஜனதாவில் சர்ச்சை பேச்சுக்கு பெயர்போன எம்.எல்.ஏ. சங்கீத் சோம் பேசுகையில், “முகலாயர்கள் இந்தியா மீது தொடர்ந்து படையெடுத்தவர்கள். வரலாறு என்ற பெயரில் துரோகிகளை மகிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். அவர்களது பெயர்கள் வரலாற்றில் இருந்து நீக்கப்பட வேண்டியது. தாஜ்மஹாலை கட்டியவர் சொந்த மகனால் சிறையில் வைக்கப்பட்டார். இந்த கதையையா வரலாறு எனக் கொண்டாடுவது?” என கேள்வி எழுப்பினார். ஏற்கனவே உத்தரபிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசு மாநில சுற்றுலாவிற்கான வழிகாட்டியில் இருந்து  தாஜ்மஹாலை நீக்கியது பெரும் சர்ச்சையாக்கியது. இப்போது சங்கீத் சோம் பேச்சும் சர்ச்சையாகி உள்ளது. 

இவ்விவகாரத்தில் உத்தரபிரதேச மாநில அரசு சங்கீத் சோம் கருத்தில் இருந்து விலகிக்கொண்டது. இந்நிலையில் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவதை நிறுத்துவாரா? என ஐதராபாத் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார். 

சங்கீத் சோம் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான ஓவைசி பேசுகையில், “துரோகிகளால் கட்டப்பட்ட டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவதை பிரதமர் நிறுத்துவாரா என்பதை தெரிந்துக் கொள்ள விரும்புகின்றேன். யுனஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இருந்தும் அதனை நீக்கவும் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள்” என கூறிஉள்ளார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா வெளியிட்டு உள்ள டுவிட் செய்தியில், இனி ஆகஸ்ட் 15-ல் செங்கோட்டையில் பேச்சு கிடையாது? சிலரது இதயத்தை மகிழ்ச்சியடைய செய்ய பிரதமர் இனி நேரு ஸ்டேடியத்தில் இருந்து மக்களுக்கு உரையாற்றுவார், என குறிப்பிட்டு உள்ளார். 

7 comments:

  1. Great. Let us see what this Communal Mody's/Moodi's Action..

    ReplyDelete
  2. Life time enemy of Muslims.. ISRAEL.. find partners Racists around the world to keep the Muslim in an UNREST Life. They succeeded in finding partners in Miyanmar.. in India.. In Sri Lanka in this work. If Muslims Keep Trust in Allah and become truly following the message of Islam, we can simply defeat the friends of Satan's. Do not be emotional for minor issues.. act intellectually to counter attack the enemies. They do worship falls GOD and oppose the True GOD who created them. So GOD will not support them in long run.. Use knowledge to defeat them but not your emotions. Be truthful and follow the way of generation who lived with last and final prophesy of GOD Muhammed. Insha Allah soon they will lose by the will of true GOD.

    ReplyDelete
  3. கிறிஸ்தவ சியோனிச ஆதரவு நாடுகள் கண்டுபிடித்த துப்பாக்கி, குண்டுகள், விமானங்கள் பயன்படுத்தலாமா?

    ReplyDelete
  4. முஸ்லிம்களுக்காக தானே இந்தியா பாடுபட்டு பாக்கிஸ்தான்-பங்களாதேஷ் என இரு நாடுகளை உருவாக்கி கொடுத்து.

    இந்தியா பிடிக்கவில்லை என்றால் அங்கு எங்காவது போவது தானே.

    இந்தியர்கள் தங்கள் நாட்டில். தங்கள் கொடியை எங்கு வேண்டும் என்றாலும் ஏற்றுவார்கள், இறக்குவார்கள் - who cares?

    ReplyDelete
  5. What happend prabhakaran?
    Samething happend to india.
    Oppressing people will get punish from god.

    ReplyDelete
  6. இந்தியர்களின் விடயங்களில் நாம் சண்டை யிட வேண்டாம், வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேசி முடிவு எடுங்கள்...

    ReplyDelete
  7. என்னமோ இந்தியாதான் பாகிஸ்தானையும் பங்களாதேசத்தையும் உருவாக்கினார்கள் போல் பேசுகிறீர்கள் mr. Ajan.
    உங்களுக்கு amnesia LTTE செய்தவற்றை மறந்தீர்கள். இப்பொழுது்இங்கிலாந்து பிரித்துக்கொடுத்ததை என்னமோ இந்தியா மனத்திறந்து கொடுத்தது போல் சொல்கிறீர்கள்.
    இந்தியனோ ஒரு கஞ்சப்பிசனாரி சொந்த மக்களுக்கே பாகுபாடாகதரதான் quota system எதையும் செய்வான்.

    ReplyDelete

Powered by Blogger.