Header Ads



மஹிந்தவே எனது பரம எதிரி - பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே தனது பரம எதிரி என அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கவின் கிளை ஒன்றை கிரிபத்கொட பிரதேசத்தில் திறந்து வைத்து உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

மஹிந்தவே எனது பரம எதிரி, அவருடைய கடந்த கால தவறுகளை அம்பலப்படுத்துவதற்காகவே நான் அரசியலுக்கு வந்து, அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

என்னால் ஒரு அரசாங்கத்தை நிறுவ முடியாது. அது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், மகிந்த ராஜபக்ச செய்த குற்றங்களை உலகத்துக்கு கூறுவதற்கு என்னுடைய கட்சி எனக்கு உதவியாக இருக்கும்.

நாடாளுமன்ற ஆசனத்தைப் பெறுவதோ, அல்லது சிறப்பு வசதிகளை அனுபவிப்பதோ எனது பயணத்தின் நோக்கம் அல்ல.

மகிந்த ராஜபக்சவின் தவறுகளை அம்பலப்படுத்துவதே எனது நோக்கம், நாடு முழுவதும் சென்று மகிந்த செய்த குற்றங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதே எனது இலக்கு என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Innum two years porunga, ambalap paduththa vantha ungalukku ambalamum minchaathu.

    ReplyDelete

Powered by Blogger.