Header Ads



அமைச்சரை பற்றி பேஸ்புக்கில் எழுதியவர் கைது

பேஸ்புக்கில் தரக்குறைவாக எழுதியதாகக் கூறி ஒருவரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை கைது செய்துள்ளது.

தமிழக மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர்  அமைச்சர் ஜெயக்குமாரைப் பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் 'Satheesh Kumar' என்ற ஃபேஸ்புக் கணக்கில் இருந்து தரக்குறைவாகவும் அவதூறாகவும் தொடர்ந்து எழுதப்பட்டுவருவதாக அக்பர் பாஷா என்பவர் புகார் கொடுத்ததாக காவல்துறை தெரிவிக்கிறது.

இந்தப் புகாரையடுத்து, அந்தக் கணக்கில் இயங்கிவந்த சதீஸ் குமார் என்பவரை மத்திய குற்றப் பிரிவு சைபர் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த திருவள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர்.

இவர் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இவர், ஜெயக்குமார் குறித்து என்ன எழுதினார் என்பது வெளியிடப்படவில்லை.

No comments

Powered by Blogger.