கிழக்கு மாகாண, அடுத்த முதலமைச்சர் யார் - பனிப்போர் ஆரம்பம்
வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்களிடையே பனிப்போர் ஆரம்பித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்குறிப்பிட்ட மூன்று மாகாண சபைகளினதும் முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அதேபோன்று தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், வர்த்தக பிரமுகர்கள் என பலரும் முதலமைச்சர் வேட்பாளராவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான பனிப்போருக்கு மத்தியில் கலைக்கப்பட்டுள்ள மூன்று மாகாண சபைகளில் இரண்டில் முதலமைச்சர்களாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இம்முறை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக எதிர்வரும் தேர்தல்களில் களமிறங்கவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் குறித்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை தம்வசம் இழுக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
We need a geneuine pocket less CM from a national party for the East. We had two Muslim CM and a Tamil CM which is more than enough for our justification.
ReplyDeleteஇராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்று இருந்துவிட்டு போகலாம். ஆனால் அரசியல்வாதிகளின் விழுமியங்களின் அடிப்படையில் கூட்டுமொத்த சமுகத்தின் குறிப்பாக சிறுபான்மையினரின் கண்ணியம் மதிப்பீடு செய்யப்படுகிறது.
ReplyDeleteஎனவே எமது வாக்குகளின் பெறுமதியை நாமே மதிப்பிறக்கம் செய்யாது சமுக அந்தஸ்தை பாதுகாத்து பேணக்கூடிய நல்லொழுக்கம் உள்ளவர்களை தெரிவுசெய்ய வாக்குகளைப் பயன்படுத்த திடசங்கர்ப்பம் கொள்வோம்.