Header Ads



ஓடும் ரயிலில் மோதல், தள்ளிவிடப்பட்டு ஒருவர் பலி

ராகம மற்றும் ஹொரப்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கி சென்ற ரயிலில் பயணித்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணம் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இதேவேளை, சம்பவத்தில் பலியானவர் யார் என, இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 

எதுஎவ்வாறு இருப்பினும், இதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.