நான், தபால் காரனாக உள்ளேன் - மனோ
மதம் மற்றும் மொழி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பாடசாலைகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும். காலாவதியான அரசியல்வாதிகள் ஒதுங்கிக்கொண்டு இவ்வாறான புதிய சிந்தனைகளுக்காக இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், தமிழ் மற்றும் சிங்கள சமூகத்தின் புரிந்துணர்விற்காக தகவல்களை கொண்டு செல்ல கூடிய தபால் காரணமாக உள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
மொழி உரிமை இல்லை என்றால் எந்தளவு பிரச்சினைகள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். அதனை பிரதிபலிக்கும் வகையில் இன்று வெளியிடப்பட்ட கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட குறுந் திரைப்படங்களில் காணக்கூடியதாக இருந்தது. இவற்றை தொடர அனுமதிக்க இயலாது. மதம் மற்றும் மொழி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பாடசாலைகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்ய விட்டால் ஒரு நாளும் இலங்கையை திருத்த முடியாது.
தேசிய கீதம் விவகாரத்தில் கூட 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் தமிழில் இசைக்கப்படவில்லை. மீண்டும் தமிழில் தேசிய கீதத்தை இசைப்பதற்கு எமக்கு 70 ஆண்டுகள் சென்றுள்ளன. இதுவே மாற்றம். தாய்மொழியில் தேசிய கீதத்தை இசைக்கும்போது உணர்வு பூர்வமாக அனுபவித்து இசைக்க முடிகின்றது.
புரியாத மொழியில் பாடுவதால் எவ்விதமான பலனும் இல்லை. வடக்கிலும் தெற்கிலும் அடிப்படை வாதிகள் உள்ளனர். அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவற்றுக்கு வாய்ப்பளிக்க முடியாது. நான் இந்நாட்டில் ஜனாதிபதியாக போவதில்லை. பிரதமாராகுவதும் இல்லை. அமைச்சராக தொடர்ந்து இருக்கப்போவதும் இல்லை.
காலாவதியான அரசியல்வாதிகள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் தெற்கில் இந்த பிரச்சினை உள்ளது. இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். அப்போது தான் புதிய சிந்தனைகள் பிறக்கும். பழமையான மரபுகள் மற்றும் சம்பிரதாயங்களில் இருந்து வெளியில் வரவேண்டும். தமிழ் மக்களுக்குள்ள பிரச்சினைகள் என்ன என்பது எனக்கு நன்கு தெரியும். அதேபோன்று இந்த விடயத்தில் சிங்கள மக்களுக்குள்ள சந்தேகங்களும் எனக்கு தெரியும். எனவே இந்த இரண்டு சமூகங்களுக்கும் தகவல்களை கொண்டு செல்லக்கூடிய தபால் காரனாக நான் உள்ளேன். இரு தரப்பையும் இணைக்கும் பாலமாகவும் உள்ளேன் என தெரிவித்தார்.
கிட்ட தட்ட 20 வருடங்களாக அரசியலுலிருக்கும் மனோ கணேஷன் ஒதுங்கிக்கொண்டு இளையோருக்கு வாய்ப்பளித்து மற்றைய அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக திகழட்டுமே?
ReplyDeleteY your stomach is burning like this??
DeleteAre u drunk? he is putting a statement "Elder politicians needs to give place to youngers". In my view he also elder.until now he is upto 20 years in political. So he can start from him. What's wrong on my comment based on his statement? are u think still he is teenager or younger?
DeleteMr GTX,
DeleteBy out dated politicians he means that some politicians are still spreading racism between tamil and sinhala for their political purpose inorder to create fights among them & by using the causes of the war such as displacement and casulalities of minority, the expired politicians will take the advantage of that like making illegal settlement, spreading their religion & raping 7 women with the endorsement of their religion, taking over the others land and interfering in the victim's political rights.
Thats what Mr. Mano means by the expired politician & it can be Rishad badiudeen, adhavudulla, sibli farook or any other muslm leaders.
There is no age limit for the short term politicians & this is a readon mano asking to retire the muslim politicians
Manoganesan is respectable politecian.he must be continue.
ReplyDeleteManoghanesan is a outspoken politician. If we take 15 gently typed-politicians, Mano will come one of them. we expect him to be the common politician for all divisions.
ReplyDeleteWell done மனோகணேஷன்.
ReplyDeleteவடக்கு-கிழக்கு க்கு வெளியே வாழும் தமிழர்கள் அணைவருக்கும் உங்கள் சேவைகள் தொடரட்டும்.
Amanda Sangari is a clerk.
ReplyDeleteMano is a postman.
Useless guys.