Header Ads



பிரபாகரனின் உடலை கண்டபோது சயனைட் குப்பி இருக்கவில்லை, நீரிழிவு மருந்தே காணப்பட்டது

பிரபாகரனின் உடலை முதன்முறையாக கண்ட போது, உயிரிழந்தது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்தான் என்று உறுதிப்படுத்துவதற்கு ஏராளமான தடயங்கள் கிடைத்திருந்ததாக முன்னாள் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் உடலுக்கு அருகில், அவரது அடையாள அட்டை, நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தும் மருந்துகள் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்று கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இதில் ஒரு கவலையான விடயம் உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களிடம் உயிரை மாய்த்துக்கொள்ளும் சயனைட் குப்பிகள் காணப்பட்டன.

ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவரிடம் உயிரை மாய்த்துக் கொள்ளும் சயனைட் குப்பிகள் காணப்படவில்லை, ஆனால் அவருடன் இருந்த ஏனைய உறுப்பினர்கள் சயனைட் உட்கொண்டு உயிரிழந்திருந்தனர். அவர்களுடைய உடல்களை நாம் கைப்பற்றியிருந்தோம்.

பிரபாகரன் தலையில் துப்பாபக்கி ரவை தாக்கி உயிரிழந்துகிடந்தார் என்று கமால் குணரட்னம் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிரபாகரனின் உடலை கண்டுபிடித்த போது “இலங்கை வரலாற்றல் மிகவும் கொடூரமான மனிதன் இராணுவத்தின் துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்தார்” என்று அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததாகவும் கமால் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Why he massacred innocent Tamils , Muslims & Sinhalese? If he educated.

    ReplyDelete
  2. Sham on the People/politician/Terror Sinhalese communities who took great a good human being into that situation......

    ReplyDelete
  3. காத்தான்குடி, ஏறாவூா் பள்ளிவாயல்களில் இறைவணக்கத்தில் இருந்த அப்பாவி முஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று குவித்தது, யாழ்பாணத்தில் இருந்து ஒட்டு மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து உடுத்த துணியுடன் மட்டும் விரட்டியவா்தானே உங்கள் The great Educated strong leader Mr. Prabagaran.

    ReplyDelete

Powered by Blogger.