Header Ads



ம‌னிதாபிமான‌ம் என்றால் என்ன‌வென்றே தெரியாத, பிர‌பா க‌ணேச‌னுடைய இன‌வாத‌ முக‌ம்

ரோஹிங்கிய‌ முஸ்லிம்க‌ள் இல‌ங்கையில் ப‌ராம‌ரிக்க‌ப்ப‌டுவ‌து இல‌ங்கையின் இறைமைக்கு ஆப‌த்து என்ற‌ முன்னாள் பிர‌தி அமைச்ச‌ர் பிர‌பா க‌ணேச‌னின் க‌ருத்து சிறுபிள்ளைத் த‌ன‌மான‌து என உல‌மாக் க‌ட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக கட்சி மேலும் தெரிவிக்கையில்,

ரோஹிங்கிய‌ முஸ்லிம்க‌ள் முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ளால் இல‌ங்கைக்கு அழைத்து வ‌ர‌ப்ப‌ட‌வில்லை. அவ்வாறு அழைத்து வ‌ர‌க்கூடிய‌ அறிவோ ப‌ல‌மோ அமைச்ச‌ர்க‌ளிட‌ம் இல்லை.

வெளிநாடு ஒன்றுக்கு போகும் போது வ‌ழி த‌வ‌றி இங்கு க‌ரை ஒதுங்கிய‌வ‌ர்க‌ள் என்று ந‌ன்கு தெரிந்தும் முஸ்லிம்க‌ளின் விகிதாசார‌த்தை அதிக‌ரிப்ப‌த‌ற்காக‌வே இங்கு அழைத்து வ‌ர‌ப்ப‌டுகிறார்க‌ள் என‌ பிர‌பா க‌ணேச‌ன் கூறியிருப்ப‌து வ‌டி காட்டிய‌ ம‌ட‌த்த‌ன‌மான‌ க‌ருத்தாகும்.

இந்தியாவில் இருந்து இல‌ங்கையின் எல்லைக்குள் வ‌ழி த‌வ‌றி வ‌ந்து மீன் பிடிக்கும் த‌மிழ‌ர்க‌ளை இல‌ங்கை அர‌சு சிறைப்பிடித்து இல‌ங்கை சிறையில் வைத்தே அவ‌ர்க‌ளை போஷிக்கிற‌து.

இவ்வாறு செய்வ‌து இங்கு த‌மிழ் ம‌க்க‌ள் ப‌ர‌ம்ப‌லுக்காக‌ த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ளின் பின்ன‌ணியில் இவ்வாறு ந‌ட‌க்கிற‌து என‌ புத்தியுள்ள‌ எவ‌னும் சொல்ல‌ மாட்டான். அவ்வாறு தான் பிர‌பா க‌ணேச‌னின் க‌ருத்து உள்ள‌து.

ஏற்க‌ன‌வே அக‌திக‌ளாக‌ இல‌ங்கைக்கு வ‌ந்த‌ ரோஹிங்யா முஸ்லிம்க‌ள் அனைவ‌ரும் வேறு நாடுக‌ளுக்கு அனுப்ப‌ப்ப‌ட்டுவிட்டார்க‌ள் என‌ அர‌சு தெளிவாக‌ அறிவித்திருப்ப‌து பிர‌பா க‌ணேச‌னுக்கு தெரியாதா என‌ கேட்கிறோம்.

இல‌ங்கை த‌மிழ் ம‌க்க‌ள் ல‌ட்ச‌க் க‌ண‌க்காணோர் அக‌திக‌ளாக‌ ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் த‌ஞ்ச‌ம‌டைந்த‌ போது அந்த நாடுக‌ள் அவ‌ர்க‌ளுக்கு உண‌வும், உறையும் ச‌ம்ப‌ள‌மும் வ‌ழ‌ங்கி த‌ங்களது ம‌னிதாபிமான‌த்தை காட்டின‌.

அத்துடன், க‌ல்முனை மீன‌வ‌ர்க‌ள் வ‌ழி த‌வ‌றி மாலைதீவு க‌ட‌ல் எல்லைக்கு சென்ற‌ போது மாலைதீவு அர‌சாங்க‌ம் இல‌ங்கை மீன‌வ‌ர்க‌ளை மாத‌க்க‌ண‌த்தில் போஷித்து பின்ன‌ர் இல‌ங்கைக்கு அனுப்பிய‌தெல்லாம் பிர‌பா க‌ணேச‌னுக்கு தெரியாது என்றால் இவ‌ருக்கு ம‌னிதாபிமான‌ம் என்றால் என்ன‌வென்றே தெரியாது என்றே தெரிகிற‌து.

ஆனால் இல‌ங்கையில் த‌ஞ்ச‌ம‌டைந்த‌ ப‌ர்மா இராணுவ‌த்தால் அனைத்தையும் இழ‌ந்த‌ ப‌ரிதாப‌த்துக்குரிய‌ ம‌க்க‌ள் இங்கு த‌ற்காலிக‌மாக‌ த‌ங்கியிருப்ப‌தை சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள் பார்ப்ப‌து போன்று பிர‌பா க‌ணேச‌னும் பார்ப்ப‌து அவ‌ர‌து முஸ்லிம் விரோத‌ இன‌வாத‌ முக‌த்தை காட்டியுள்ள‌து.

இல‌ங்கை முஸ்லிம்க‌ள் த‌ங்களது தொகையை அதிக‌ரிக்க‌ வேண்டுமாயின் த‌மிழ் நாட்டு முஸ்லிம்க‌ள் இங்கு வ‌ந்தாலே போதும்.

மேலும், இல‌ங்கை முஸ்லிம்க‌ள் விரும்பாம‌ல் நாட்டின் இறைமையை பாதுகாப்ப‌தில் அக்க‌றையுட‌ன் உள்ளார்க‌ள் என்ப‌தை பிர‌பா க‌ணேச‌ன் போன்றோர் புரிந்து கொள்ள‌ வேண்டும் என உல‌மாக் க‌ட்சி குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.