றிசாத்தை நீக்கும்படி கோரிக்கை - ஜனாதிபதி என்ன செய்யவார்..?
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீனை பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் இதற்கான பொறுப்பினை அமைச்சர் ரிசாட் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் சிரேஸ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.
எனவே, அமைச்சர் ரிசாட்டை வர்த்தக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென கோரியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைவதற்கான காரணம் அரசியல் சூழ்ச்சித் திட்டம் என சிரேஸ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளனர்.
அமைச்சர் ரிசாட்டை பதவியிலிருந்து நீக்கி பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தாவிட்டால் அரசாங்கம் எதிர்கால தேர்தல்களில் தோல்வியடையும் என தெரிவித்துள்ளனர்.
Post a Comment