Header Ads



ரோமாபுரி சக்கரவர்த்தி, முஆவியா ரலியிடம் எழுப்பிய கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும்

ரோமாபுரியின் சக்கரவர்த்தி கைஸர், அமீர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி, அதில் கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் கேட்டிருந்தார்.
.
1, கிப்லா இல்லாத பகுதி எது ?

2, தந்தை இல்லாதவர் யார் ?

3, குடும்ப பாரம்பரியமில்லாதவர் யார் ?

4, ஒருவரை அவருடைய கப்று கொண்டு நடந்தது அவர் யார் ?

5, கருவறையில் படைக்கப்படாத மூன்று வஸ்துக்கள் எவை ?

6, மூன்று பொருள் :- ஒன்று முழுமையானது. இன்னொன்று அரைகுறையானது. மற்றொன்று ஒன்றுமே இல்லாத வஸ்து. இவை யாவை ?

7, உலகிலுள்ள எல்லாப் பொருளின் வித்தையும் ஒரு போத்தலில் போட்டு எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
.
இவ்வாறு கேள்விகள் அடங்கிய இக்கடிதத்தை அமீர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அனுப்பினார்கள்.
.
அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களால் “திருக்குர்ஆனின் விஷய ஞானத்தையும் மார்க்கத்தின் சட்ட ஞானத்தையும் யா அல்லாஹ்! இவருக்கு கற்றுக்கொடு” [புகாரி : 75,143]
.
என விஷேசமாக துஆ செய்யப்பட்டவர்களும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் என பிரபலமாக அறியப்பட்டவருமான பேரறிஞர் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மேற்படி கடிதத்திற்கு அளித்த பதில்கள் வருமாறு :-
.
1, கிப்லா இல்லாத பகுதி கண்ணியம் வாய்ந்த கஃபாவின் உள்பாகமாகும்.
.
2,தந்தை இல்லாதவர்,ரூஹுல்லாஹ் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்.
.
3, குடும்ப பாரம்பரியமில்லாதவர், பாவா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்.
.
4, கப்று கொண்டு நடந்தது, ஹள்ரத் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்.
.
5, கருவரையில் வைத்து படைக்கப்படாத மூன்று வஸ்துக்களாவன ;

[1] நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பகரமாக குர்பானி கொடுப்பதற்காக நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆடு.

[2] கற்பாறையிலிருந்து வெளிவந்த சாலிஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அதி அற்புத ஒட்டகம்.

[3] மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாம்பு.
.
6, சுய புத்தி உள்ளவர் முழுமையானவர். சொல் புத்தி மட்டும் உடையவர் அரைகுறையானவர்.சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை. இவர் தான் ஒன்றுமே இல்லாத வஸ்து.
.
7. பின்னர், ஹள்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பாட்டிலில் நீரை நிரப்பி “இது தான் எல்லா பொருளின் மூல வித்து” என பதிலளித்தார்கள்.
.
ஏனெனில் அல்லாஹ் தன் மறையில் وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ "நீரிலிருந்து தான் உயிருள்ள ஒவ்வொரு வஸ்துவையும் நாம் ஆக்கினோம்". [அல்குர்ஆன் :21 ;30] எனக் கூறுகிறான்.
.
MMM Nussak

4 comments:

  1. Nice Article...Thank you Nussak.

    ReplyDelete
  2. Masha allah.good knowledge.masha allah

    ReplyDelete
  3. سبحانالله என்னஒரு தெளிவு, எவ்வாறான அறிவுடய கேழ்விக்கும் இஸ்லாத்தில் பதில் உள்ளது. மனிதர்கள் அதுபற்றி விளங்க முயற்சிப்பதே மிகஅரிது...

    ReplyDelete

Powered by Blogger.