உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியும், ரணிலின் பதிலும்..!!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தாமல் தொடர்ந்தும் ஒத்திவைக்கும் தயார்நிலைகள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சில உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதால் அது குறித்து எதிர்வரும் செவ்வாய் கிழமை அமைச்சரவையில் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச சபைகளை பிரித்து 4 புதிய பிரதேச சபைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment