Header Ads



தேர்தல் களத்தில் பாதாள குழுக்கள், அரசியல்வாதிகளுடன் நெருக்கமும் ஆரம்பம்

பாதாள உலக குழுக்களுடன் தொடர்புள்ள நபர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களை பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக களமிறக்க இரகசிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்காக கொழும்பு மற்றும் தென் பகுதிகளை கேந்திரமாக கொண்டுள்ள பிரதான பாதாள உலக குழுக்கள் அரசியல்வாதிகளை நெருங்கி வர ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே தென் பகுதியில் செயற்படும் பாதாள உலக குழுக்களின் செயற்பாட்டாளர்கள் ஏற்கனவே தமது கிராமங்களுக்கு சென்று பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதாக பாதாள உலக குழுக்களை அடக்கும் பொலிஸ் பிரிவுகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

பல குற்றங்கள் தொடர்பாக தேடப்பட்டு வரும் பாதாள உலக குழுக்களை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் சிலர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் அலுவலகத்தில் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

1 comment:

  1. What can the Maha Sanga do about this. Most of the politicians are thieves and corrupted.

    ReplyDelete

Powered by Blogger.