இலங்கை முஸ்லிம் திருமண, பதிவாளர்களின் அதிகார துஷ்பிரயோகம்
-Mohamed Jawzan-
என் அன்பு நண்பர்கள் மற்றும் மக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹு
இலங்கையில் தற்போது நடந்து வரும் சில திருமணங்களில் திருமண மாப்பிள்ளை வீட்டாரின் மோசடியான கோரிக்கைக்கு துணை போகும் இலங்கை முஸ்லிம் திருமண பதிவாளர்களின் அதிகார துஸ்பிரயோங்களை மக்கள் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் அதிகாரிகளின் கவனத்திற்காக..
மக்களே, அதிகாரிகளே.
இலங்கையில் முஸ்லிம் திருமண பதிவாளர்கள் திருமண மாப்பிள்ளை வீட்டாரின் முறையற்ற மோசடியான கோரிக்கைகளுக்கு துணை போகும் இலங்கை திருமண பதிவாளர்கள் சிலர் மாப்பிள்ளை வீட்டார் வாங்கும் சீதனம் என்ற திருட்டை அநியாயமாக மறைக்கும் விதமாக வாங்கும் சீதன தொகைகளை இலங்கை அரசின் திருமண பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இயற்றப்பட்ட திருமண பதிவில் அதை போட கூடாது என்ற அவர்களின் முறைகேடான கோரிக்கைக்கு துணை போகும் முஸ்லிம் திருமண பதிவாளர்கள் அவர்களின் அரச அதிகார சட்த்தின் சத்தியப்பிரமானங்களையும் மீறி சீதனம் வாங்கி ஏப்பமிடும் சில மாப்பிள்ளை வீட்டாருக்கு சாதகமாக அரசின் திருமண பாதுகாப்பு பதிவின் சட்டத்திற்கு விரோதமாக அதிகார துஷ்பிரயோகம் செய்து மாப்பிள்ளை வீட்டார் வாங்கும் சீதனத்தை மறைத்து அதை வாங்காதது போன்ற திருமண பதிவை பதிவு செய்து அப்பாவி பெண் வீட்டாருக்கு துரோகம் மற்றும் மோசடி செய்யும் சேவையை செய்து வருவதை மக்களும் அதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்
மேலும் இந்த துஷ்பிரயோகத்தின் விளைவாக துரதிஷ்ட வசமாக அந்த திருமணம் விவாகரத்தாகும் நிலை வரும் போது சீதனத் தொகையை கொடுத்த பெண் வீட்டாருக்கு விவாகரத்து வாங்கும் மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து பெண் வீட்டாருக்கு சட்டப்படி அந்த சீதனத் தொகையை மீளப் பெற்று கொள்ள முடியாத அழிக்கப்பட்ட மறைக்கப்பட்ட ஆதாரமாக அந்த திருமண பதிவு இருந்து கொண்டு இருக்கிறது
இந்த அதிகார துஷ்பிரயோகத்தின் காரணமாக அதிகமான திருமணங்கள் மாப்பிள்ளை வீட்டார் மூலம் தேவையற்ற காரணங்களை வைத்து அதிகமான விவாகரத்துகள் மற்றும் அதனை தொடர்ந்து இலகுவாக வாங்கிய சீதன தொகைகளை கொடுக்காமல் விவாகரத்து வாங்கும் நிலை நாட்டில் உருவாகி வருகிறது
ஆகவே இந்த கட்டுரையை படிக்கும் மக்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் இதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவணத்தில் கொண்டு இதை தடுத்து மாப்பிள்ளை வீட்டாரால் வாங்கப்படும் சீதன தொகையை திருமண பதிவில் கண்டிப்பாக பதிவு செய்யும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
மேலும் இலங்கையில் இந்த மாதிரி அதிகார துஷ்பிரோகங்களை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக சகல நடவடிக்கைகளையும் அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறோம்
இதன் மீதான கடுமையான நடவடிக்கைகள் தேவையற்ற விவாகரத்துக்களை தவிர்க்கும் என்பதில் சந்தேகம் கிடையாது
மற்றும் இந்த திருமண பதிவாளர் அதிகாரங்களில் இஸ்லாமிய மார்க்கம் படித்த மெளலவிமார்களும் அடங்குவர்
இப்படிப்பட்ட அதிகார துஷ்பிரயேகங்களை செய்பவர்களில் இந்த அதிகாரத்தில் உள்ள மெளலவிமார்களும் உள்ளனர் என்பது வேதனையான விடயமாக உள்ளது என்பதையும் தெரிவித்து கொண்டு என் அன்பு இலங்கை இஸ்லாமிய சொந்தங்களின் நன்மை கருதி இந்த தகவலை உங்களுக்கு அறியத்தந்து இதை உங்களுடன் பகிர நாம் கடமைப்பட்டுள்ளோம் எனபதை தெரிவிக்கிறோம்
இலங்கையில் சில முஸ்லிம்களிடத்தில் வரதட்சணை என்ற கேடு கெட்ட வழக்கம் தற்போதும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சீதனம் வாங்குராங்களா இல்லை கொடுக்கிராங்களா
ReplyDelete