Header Ads



முஸ்லிம்களின் ரத்தக்கரை படிந்த மோடி, மிகப்பெரும் பயங்கரவாதி - பாகிஸ்தான்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி காஜா ஆசிப் நமது பிரதமர் நரேந்திர மோடியை தீவிரவாதி என்று நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய காஜா ஆசிப், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களால் இந்திய எல்லைக்குட்பட்ட அப்பாவி மக்கள் பலியாவது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், குஜராத் மாநில முதல் மந்திரியாக இருந்தபோது முஸ்லிம்களின் ரத்தக்கரை படிந்த கைகளுக்கு சொந்தக்காரரான ஒருவர் தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கிறார் என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்னும் ஒரு தீவிரவாத அமைப்பு ஆட்சி செய்து வருவதாக குறிப்பிட்ட காஜா ஆசிப், ஆர்.எஸ்.எஸ். என்னும் தீவிரவாத அமைப்பின் கிளை கட்சிதான் பா.ஜ.க. என்றும் தெரிவித்தார். அவரை இடைமறித்த நிகழ்ச்சி தொகுப்பாளர், நரேந்திர மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தீவிரவாதி என்று கூறியதை ஆமோதித்த காஜா ஆசிப், ஒரு தீவிரவாதியை தேர்ந்தெடுக்கும் நாடு, எப்படிப்பட்ட நாடாக இருக்கும்? என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்திய பிரதமர் பயன்படுத்தும் வார்த்தைகள், அங்கு பசு மாடுகள் தொடர்பாக முஸ்லிம்கள் கொல்லப்படும் விதம், சமீபத்தில் தசராவின்போது ரோஹிங்கியா முஸ்லிம்களின் கொடும்பாவிகளை எரித்த சம்பவம் ஆகியவற்றை பார்க்கும்போது, மற்றவர்களை தீவிரவாதிகள் என்று சகட்டுமேனிக்கு அழைக்கும் ஒரு நாட்டின் தலைமை ஆட்சியாளரான மோடி மிகப்பெரிய தீவிரவாதியாக உள்ளார்.

குஜராத்தின் முதல் மந்திரியாக அவர் இருந்தபோது, அவரது மேற்பார்வையில் முஸ்லிம்கள் கற்பழிக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். அவருக்கு அமெரிக்கா தடை விதித்திருந்ததையும் மறந்து விடக்கூடாது என்றும் அவர் பேசியுள்ளார்.

காஜா ஆசிப்பின் கருத்துக்கு பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நரசிம்ம ராவ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

6 comments:

  1. Haja Asif should have been used his words in a much more diplomatic tone.

    ReplyDelete
  2. So wat hapened to the 2 millions Hindus in Pakistan when it derivated from India,
    Everybody were buried and converted to islam, first develop a comittee to investigate that.
    then point out the others,we need the investigation on pakistani govt which resonsibility for eliminating the others.

    ReplyDelete
  3. காஷ்மீர, குஜராத் களில் தீவிரவாதிகளை உருவாக்குவதே பாக்கிஸ்தான் தான்.

    ReplyDelete
  4. Mr.Ajan அவர்களே அப்ப இலங்கையில் இந்திய உருவாக்கியவர்கள் யார் ?

    ReplyDelete
    Replies
    1. Mr.Abdullah,

      Everything is political, if the western super powers need, they call freedom fighters,if they don,'t want they name terrorists.
      The reality is clear, India can control over Kashmir since the ppl of Kashmir want to combine with India.

      At the same time UN can't do the referendum for the state of Kashmir whether they nEed to seperate ot combine,but for sure if it is happened,Tamilnadu will be the first state want to liberate from India,
      So it is all about political game, abybody can achieve if they move in diplomatic way by keeping the emotions and feeling aside

      Delete
  5. Mr.Anusath. ஆணவம் பிடித்த அதிகாரவர்க்கம் தாங்களும் தங்களை சார்ந்தவர்களும் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக.நடத்தும் நாடகம்.இலங்கையில் இந்திய செய்தது என்ன.விடுதலைப்புலிகளுக்கும் ஆயுதபயிற்சி வழங்கி. அடுத்தவருக்கும் கொடுத்து.ஒருவரை ஒருவர் மோதவிட்டு.கடைசியில் கண்டது எதுவுமில்லை.உலகில் அமைதி வரவேண்டுமானால் பலஸ்தீன் அமைதியடைந்தால் யொழிய வராது.

    ReplyDelete

Powered by Blogger.