தேக்கு மரத்தை வெட்டியதால், கோபமுற்ற தென்னைமரம் விழுந்து பெண் பலி
ஹிங்குரக்கொட பட்டுகொட்டுவ பகுதியில் மரம் விழுந்தமையினால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் மரம் வெட்டப்பட்டுக்கொண்டிருந்த போது குறித்த மரம் அருகிலிருந்த தென்னை மரத்தின் மீது சரிந்த நிலையில் தென்னை மரம் விழுந்தமையினால் அதில் சிக்குண்டு குறித்த பெண் உயிரிழந்தவர்.
42 வயதுடைய குறித்த பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் ஹிங்குரக்கொட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment