Header Ads



மண்கும்பான் பள்ளிவாசல் காணியில், தங்குமிட அறைகள் நிர்மாணம்


-பாறுக் ஷிஹான்-

யாழ் மாவட்டம்   வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட   மண்கும்பான் பள்ளிவாசல்   காணியில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த   தங்குமிட அறைகள் விரைவாக   தற்போது  நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

2017.08.08ம் திகதிகளில் நடைபெற்று முடிந்த ஒன்றுகூடலை மையமாக  கொண்டு தனவந்தர்   நியாஸ் ஹாஜியாரின்  முயற்சியில் ஏனைய  தனவந்தர்களிடம் இருந்து நிதி பெறப்பட்ட  நிதியினூடாக குறித்த தங்குமிட அறைகள்   நவீன   குளியலறை  மலசலகூடம் போன்றன   நிர்மாணிக்கப்படுகின்றன.

ஏற்கனவே இப்பள்ளிவாசலுக்கென சுமார் 8 அறைகள் நியாஸ்  ஹாஜியாரின் ஏற்பாட்டில் கட்டப்பட்டு மண்கும்பான் பள்ளிவாசல் நிர்வாகசபையிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இவையணைத்தும் இப்பள்ளிவாசலுக்கு வருமானத்தை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்ற நோக்கம் கருதியே ஹாஜியாரினால்  செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.