Header Ads



ஜனாதிபதியை தவறாக வழிநடத்தி, செயலாளர்கள் குழப்புகிறார்கள் - மூத்த அமைச்சர் போர்க்கொடி


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றின் பொதுச் செயலாளர்கள் கட்சிகளை குழப்புகின்றார்கள் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக மஹிந்த அமரவீரவும், சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்கவும் கடமையாற்றி வருகின்றனர்.

இந்த இருவரினதும் நடவடிக்கைகள் மற்றும் கூற்றுக்களினால் கட்சிக்குள் உட்பூசல் ஏற்படுதாக அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர்களில் ஒருவருமான ஜோன் செனவிரட்ன கொழும்பு வார இறுதி பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த இருவரும் தங்களது கருத்துக்களினால் ஜனாதிபதியை பிழையாக வழிநடத்துகின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கட்சியின் தலைவரான ஜனாதிபதியின் கருத்துக்கு முரண்பட்ட கருத்துக்களை இவர்கள் வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர், கருத்துக்களை வெளியிடும் போது மிகவும் நிதானமாகவும் பொறுப்புடனும் வெளியிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.