Header Ads



அமைதிப் படையான இலங்கை அணி வீரருக்கு, சச்சின் வாழ்த்து


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்ணனி வீரரான ரங்கனா ஹேரத் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது 400வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

மேலும், டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-வது சுழல்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன் இலங்கையின் முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோன் மற்றும் இந்தியாவின் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  ரங்கனா ஹேரத்துக்கு  சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைதிப் படையான இலங்கை அணியின் வீரர் இத்தகைய சாதனை புரிந்தது மிகவும் மகிழ்ச்சி என     சச்சின் டுவிட் செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.