Header Ads



தாயைத் தேடி இலங்கை வந்துள்ள, ரெபேக்காவிற்கு உதவுங்கள்


1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் பிறந்த குழந்தையொன்று, சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அநாதரவாக விடப்பட்டது.

அப்போது, இலங்கைக்கு வந்திருந்த பிரித்தானிய தம்பதியினர் அந்தக் குழந்தையைக் கடத்திச்சென்றனர்.

ரெபேக்கா நளாயினி எனும் அவர் தமது உண்மையான தாயைக் கண்டுபிடிக்கும் ஏக்கத்துடன் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார்.

ரெபேக்கா 2003 ஆம் ஆண்டிலிருந்து தனது தாயைத் தேடி வருகின்றார்.

இது தொடர்பில் 6 தடவைகள் மரபணு பரிசோதனைகளை அவர் முன்னெடுத்திருந்த போதும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

தனது தாயைத் தேடும் ரெபேக்காவிற்கு நீங்களும் உதவலாம்.

இவரின் குடும்பம் தொடர்பிலான தகவல்களை நீங்கள் அறிந்திருந்தால் 0114 896 896 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக அறியத்தாருங்கள்.

No comments

Powered by Blogger.