Header Ads



ஒரே அறையில் தங்கியிருந்த நண்பனைக் கொலைசெய்து 80,000 ரூபாவை கொள்ளையிட்ட நபர்

நண்பனைக் கொலை செய்து அவரிடமிருந்த 80,000 ரூபாவை கொள்ளையிட்டுச் சென்ற நபரை கேகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கேகாலை புளத்கொஹுப்பிட்டிய வீதியில் கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் தொழில்புரியும் நிட்டம்புவவைச் சேர்ந்த 40 வயதான நபரே கைது செய்யப்பட்டவராவார்.

இந்த நபர் இந்த நிறுவனத்தில் தொழிலாளியாக கடமையாற்றிக் கொண்டு அந்த நிறுவனத்தில் பணியாற்றும் 35 வயதான நபருடன் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளார்.

சந்தேக நபர் கடந்த 19 ஆம் திகதி இரவு அந்த நிறுவனத்துக்குச் சென்று உயிரிழந்த நபருடன் உரையாடி விட்டு 20 ஆம் திகதி அதிகாலை அந்த நபரை கொலை செய்து விட்டு அலுமாரியிலிருந்த சுமார் 80, 000 ரூபாவை கொள்ளையிட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

அன்றைய தினம் காலை நிறுவன உரிமையாளர் சென்று பார்த்தபோது சுனிமல் என்ற நபர் படுக்கையிலேயே கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பார்த்து கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கேகாலை நீதிவான் கிஹான் மீகஹாகே சம்பவ இடத்துக்குச் சென்று மரண விசாரணையை மேற்கொண்டு பின்னர் சடலத்தை கேகாலை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

1 comment:

  1. பணத்துக்காக எதையும் செய்யும் காலம். ..

    ReplyDelete

Powered by Blogger.