Header Ads



சவுதிக்கு சென்ற இலங்கை, பெண்ணை 7 வருடங்களாக காணவில்லை


தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்த பெண் ஒருவர் தொடர்பில் கடந்த ஏழு வருடங்களாக எவ்வித தகவல்களும் இல்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.

ஹாலி எல – சூரியபுர, கெட்டவெல பகுதியைச் சேர்ந்த மாடசாமி ராஜலக்ஷ்மி என்பவர் ஐவர் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையாவார்.

ஏழ்மை காரணமாக 2008 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு தொழில் பெற்று சென்றிருந்தார்.

தனது 47 ஆவது வயதில் சவுதிக்கு சென்ற இவர், இரண்டு வருடங்கள் குடும்பத்தாருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

எனினும், கடந்த ஏழு வருடங்களாக ராஜலக்ஷ்மியிடம் இருந்து எவ்வித அழைப்பும் இல்லை எனவும் அவரைத் தொடர்புகொள்ள முடியாதுள்ளதாகவும் உறவினர்கள் குறிப்பிட்டனர்.

சவுதியின் தமாம் பகுதியிலேயே ராஜலக்ஷ்மி தொழில் புரிந்து வந்துள்ளார்.

தனது மகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு ராஜலக்ஷ்மியின் அப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும், அது பலனலிக்கவில்லை.

No comments

Powered by Blogger.