Header Ads



லிப்ட் இயங்காமையால் முகூர்த்த நேரம் மிஸ் ஆனது - 50 இலட்சம் நஷ்டஈடு கேட்கும் சட்­டத்­த­ரணி

தனது திரு­மண ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்த கொழும்­பி­லுள்ள ஐந்து நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றில் மின்­னு­யர்த்­தி­யினுள் (லிப்ட்) வெகு­நே­ர­மாக தான் சிக்­குண்­டதால் திரு­ம­ணத்­துக்­கான முகூர்த்த நேரம் கடந்த நிலையில் சம்­பி­ர­தா­யங்கள் எத­னையும் மேற்­கொள்­ளாது பதிவுத் திரு­மணம் செய்து கொள்ளும் அள­வுக்கு குறித்த 5 நட்­சத்­திர ஹோட்டல் நிர்­வா­கத்தால் தான் அசெ­ள­க­ரி­யத்­துக்கு உள்­ளா­ன­தாக மண­ம­க­னான சட்­டத்­த­ரணி வருண நாண­யக்­கார அந்த ஹோட்­ட­லுக்கு எதி­ராக நட்­ட­ஈ­டு­கோரி வழக்குத் தாக்கல் செய்­துள்ளார்.

இந்­நி­லையில், திரு­மண தினத்­தன்று மின்­னு­யர்த்­தியில் சிக்­குண்டு தான் அசெ­ள­க­ரி­யத்­துக்­குள்­ளா­ன­மைக்கு நட்­ட­ஈ­டாக குறித்த ஹோட்­ட­லிடம் 50 இலட்சம் ரூபா நட்­ட­ஈ­டு­கோரி அந்த நட்­சத்­திர ஹோட்­ட­லுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு கொழும்பு மாவட்ட நீதி­பதி ஜயகி அல்விஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட வேளையில் வாதி­யான சட்­டத்­த­ர­ணி­யான வருண நாண­யக்­கார சாட்­சி­ய­ம­ளித்தார்.

நுகே­கொடை உட­ஹ­முல்ல பிர­தே­சத்தைச் சேர்ந்த சட்­ட­த­ர­ணி­யான வருண நாண­யக்­கார 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் 22 ஆம் திகதி தனது திரு­மண தினத்­தன்று திரு­மண ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்த ஹோட்­டலின் கீழ் தளத்­தி­லி­ருந்து 10 மாடியை நோக்கி மின்­னு­யர்த்­தியின் மூலம் தனது தாய், தந்­தை­யுடன் சென்று கொண்­டி­ருந்­த­போது 1 ஆம் மற்றும் 5 ஆம் மாடி­க­ளுக்கு இடையில் குறித்த மின்­னு­யர்த்தி பாரிய சத்­தத்­துடன் சடு­தி­யாக நின்­றுள்­ளது.

அதன்­போது சுமார் 10 நிமி­டங்­க­ளுக்கு தாம் மின்­னு­யர்த்­தி­யினுள் சிக்­குண்­ட­துடன் மின்­துண்­டிப்பால் ஏற்­பட்ட இருளைப் போக்க கைத்­தொ­லை­பேசி வெளிச்­சத்தைப் பயன்­ப­டுத்திக் கொண்­ட­தா­கவும் உள்­ளி­ருந்த ஒலி­வாங்கி மூலம் உத­வி­கோரி அழைத்­த­போதும் எவரும் பதி­ல­ளிக்­க­வில்லை என அவர் தெரி­வித்­துள்ளார்.

அத­னை­ய­டுத்து சுமார் 10 நிமி­டங்­களின் பின்னர் மின்­னு­யர்த்தி செயற்­பட்டு மேல் நோக்கி பய­ணித்து 10 ஆவது மாடியை அடைந்த போது இறங்­கு­வ­தற்கு முயற்­சிக்­கையில் மின்­னு­யர்த்தி தரை­யி­லி­ருந்து 1 அடி உய­ரத்தில் நிறுத்­தப்­பட்­டதால் வய­தான தனது தாய் தந்தை மிகவும் சிர­மத்­துடன் மின்­னு­யர்த்­தி­யி­லி­ருந்து இறங்­கி­ய­தாகத் தெரி­வித்­துள்ளார்.

அதன்­போது மண­மகன் கோலத்­தி­லி­ருந்த தனது திரு­மண ஆடை வியர்­வையில் நனைந்­தி­ருந்த நிலையில் கடும் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு மத்­தியில் சுப நேரத்தில் நிகழ்த்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த சடங்­கு­களை மேற்­கொள்­ளா­மலும் வாக்­கு­றுதி அளிக்­கா­மலும் பதி­வாளர் முன்­னி­லையில் கையொப்­ப­மிட்டு தான் திரு­மணம் செய்து கொண்­ட­தாக சட்­டத்­த­ரணி வருண நாண­யக்­கார மன்றில் தெரி­வித்தார்.

இந்நிலையில் இவ்வழக்கை கொழும்பு மாவட்ட நீதிபதி ஜயகி அல்விஸ் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

(ரெ.கிறிஷ்­ணகாந்)

No comments

Powered by Blogger.