Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின், இனச்சுத்திகரிப்புக்கு வயது 27


1990 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாத இறு­தியில் தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் ஆயுத முனையில் வடக்­கி­லி­ருந்து ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களும் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்டு 27 வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் அம்­மக்­க­ளுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்­கப்­பட்டு வரு­வ­தாக கவலை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

வடக்­கி­லி­ருந்து வெ ளியேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களை மீளக்­கு­டி­ய­மர்த்­தவோ அவர்­க­ளுக்­கான வீட்டுத் திட்­டங்கள் உள்­ளிட்ட அடிப்­படை வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்­கவோ இது­வரை அர­சாங்­கத்­தினால் முறை­யான முயற்­சிகள் எதுவும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும் வடக்கு முஸ்­லிம்கள் விவ­கா­ரத்தில் அக்­க­றை­யு­டை­ய­வர்­க­ளாக தம்மைக் காட்டிக் கொள்­கின்ற போதிலும் நடை­மு­றையில் அம் மக்­க­ளுக்கு பிர­யோ­ச­ன­ம­ளிக்கும் வகை­யி­லான திட்­டங்கள் எதுவும் அமுல்­ப­டுத்­தப்­ப­டா­மையும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

அத்­தோடு, யுத்தம் நிறை­வுக்கு வந்து 8 ஆண்­டுகள் கடந்தும் அம்­மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு அர­சாங்­கத்­தி­னாலும் தொண்டு நிறு­வ­னங்­க­ளாலும் முறை­யான திட்­ட­மொன்றை வகுக்க முடி­யாது போயுள்­ள­தா­கவும் சிவில் சமூக ஆர்­வ­லர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

இதே­வேளை, மீள்­கு­டி­யேற்ற செயற்­பா­டு­களில் முஸ்லிம் அர­சியல் தரப்­பு­க­ளுக்கும் வடக்­கி­லுள்ள அர­சாங்க அதி­கா­ரி­க­ளுக்­கு­மி­டையே முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­வ­த­னாலும் அர­சாங்க அதி­கா­ரிகள் இன ரீதி­யாக பார­பட்­ச­மாக நடந்து கொள்­கின்­ற­மை­யாலும் மீள்­கு­டி­யேற்றம் தொடர்ந்தும் சிக்கல் நிலைக்­குள்­ளா­கி­யுள்­ளது. 

இவ்­வ­தி­கா­ரிகள் வடக்கின் வீட்­டுத்­திட்­டங்­களில் முஸ்லிம் மக்­களை உள்­ளீர்ப்­பதில் பல்­வேறு தடங்­கல்கள் ஏற்­ப­டுத்­து­வ­தனால் வடக்கு முஸ்­லிம்­க­ளுக்கு பாரி­ய­ளவில் அநீதி இழைக்­கப்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

இதே­வேளை, மீள்­கு­டி­யேற்ற விட­யத்தில் கடந்த மற்றும் தற்­போ­தைய அர­சாங்­கங்கள் கையாண்ட பொறி­மு­றைகள் முஸ்லிம் மக்­களின் குடி­யேற்­றத்தில்  கடும் தாக்­கத்தை செலுத்­தி­யுள்­ளன.  2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்­தலின் போது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த போதிலும் அவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதற்­காக ஜனா­தி­பதி குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்ற நிலையில் வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தில் முன்­னேற்­றங்கள் காண முடி­யா­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 

 வட மாகாண முஸ்லிம்கள் விடயத்தில் முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் தலைமைகள் ஒன்றிணைந்து அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் நீடித்து நிலைத்து நிற்கத்தக்க திட்ட மொன்றை வரைந்து அதனை நடை முறைப்படுத்துவதற்குத் தேவையான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது.

-SNM.Suhail-

No comments

Powered by Blogger.