Header Ads



காதில் ஹெட்செட்டுடன், பாதையில் சென்ற 17 வயது மாணவன் ரயில் மோதி பலி

காதில் (இயர் போன்) ஹெட் செட்டை செருகிக் கொண்டு ரயில் பாதையால் சென்று கொண்­டி­ருந்­த­தாகக் கூறப்­படும் 17 வய­தான மாணவர் ஒருவர் ரயிலால் மோதப்­பட்டு உயி­ரி­ழந்த சம்­பவம் நேற்றுக் காலை வவு­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

நேற்றுக் காலை வவு­னியா ஈரப் பெ­ரி­ய­குளம் பகு­தியில் கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பாணம் நோக்கிச் சென்ற கடு­கதி ரயி­லி­னா­லேயே இந்த மாணவன் மோதப்­பட்டு உயி­ரி­ழந்தார். இவர் வவு­னியா அவு­சு­து­பிட்­டிய பகு­தியைச் சேர்ந்த 17 வய­தான மாணவன் என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.

உயி­ரி­ழந்­த­வரின் சடலம் வவு­னியா ரயில் நிலை­யத்தில் வைக்­கப்­பட்டு பின்னர் பிரேத பரி­சோ­த­னைக்­காக வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. மேலதிக விசாரணைகளை பொலி ஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கதீஸ்)

No comments

Powered by Blogger.