காதில் ஹெட்செட்டுடன், பாதையில் சென்ற 17 வயது மாணவன் ரயில் மோதி பலி
காதில் (இயர் போன்) ஹெட் செட்டை செருகிக் கொண்டு ரயில் பாதையால் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படும் 17 வயதான மாணவர் ஒருவர் ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவம் நேற்றுக் காலை வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
நேற்றுக் காலை வவுனியா ஈரப் பெரியகுளம் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி ரயிலினாலேயே இந்த மாணவன் மோதப்பட்டு உயிரிழந்தார். இவர் வவுனியா அவுசுதுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதான மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் வவுனியா ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலி ஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment