Header Ads



மோட்டார் சைக்கிள் சாரதிக்கு எதிராக 12 குற்றச்சாட்டுக்கள் ரூ. 370000 அபராதம்

வாகன விபத்து தொடர்பான குற்றச்சாட்டில் கைதான ஒருவருக்கு, மூன்று இலட்சத்து எழுபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று ஹொரண பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்து ஒன்று தொடர்பில், குறித்த மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர் ஹொரண பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். 

இதனையடுத்து, சந்தேகநபர் ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

இதன்போது, அவருக்கு அபராதம் மற்றும் ஒருவருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றமை, வேகமாக வாகனம் செலுத்தியமை, பதிவு செய்யப்படாத வாகனத்தில் பயணித்தமை மற்றும் போலி வாகனத் தகடுகளை பயன்படுத்தியமை உள்ளிட்ட 12 குற்றச்சாட்டுக்கள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.