ரோஹின்ய படகு கவிழ்ந்து, 10 பேர் வபாத்
மியான்மர் நாட்டை விட்டு தப்பி ஓடும் ரோஹிஞ்சா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து குறைந்தது பத்து பேர் இறந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானவர்களைக் காணவில்லை.
அதிக சுமை கொண்ட அந்த மீன்பிடி படகு, நஃப் ஆற்றின் குறுக்கே ரோஹிஞ்சா அகதிகளை சுமந்து கொண்டு வங்கதேசத்திற்கு சென்றபோது கவிழ்ந்ததது.
இறந்தவர்களில் குறைந்தபட்சம் நான்கு பேர் குழந்தைகள்.
முஸ்லிம் போராளிகளின் தாக்குதல்கள் இராணுவத்தைத் தாக்குதல் நடத்த தூண்டிய பிறகு, ஆகஸ்ட் மாதம் மியன்மாரில் இருந்து ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தப்பிச் சென்றதிலிருந்து தொடர்ச்சியாக ஏற்படும் படகு விபத்து வரிசையில், இந்த சம்பவம் சமீபத்திய ஒன்றாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, ஐந்து லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான ரோஹிஞ்சா அகதிகள் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றிருக்கின்றனர்.
Post a Comment