Header Ads



இனவாதிகளின் எதிர்ப்பை முறியடித்து SLTJ யின் பெருநாள் தொழுகை (படங்கள்)


ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் - திகன கிளை நடத்திய பெருநாள் திடல் தொழுகை இன்று கனிசம மைதானத்தில் நடைபெற்றது. தவ்ஹீத் ஜமாத்தின் பெருநாள் தொழுகைக்கு எதிராக மஹா சொஹொன் பலகாய என்ற இனவாத அமைப்பினர் ஆர்பாட்டம் செய்யப் போவதாகவும், திடல் தொழுகை நடத்தக் கூடாது எனவும் அறிவிப்பு செய்திருந்தனர். 

இனவாதிகளின் எதிர்ப்பை மீறி இறைவனின் அல்லாஹ்வின் உதவியால் எதிர்பார்ததை விட சிறப்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. 

பாதுகாப்பு நிமித்தமாக பொலிஸ் தரப்பினர் பெருவாரியாக குவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ஹிஷாம் மன்சூர் உரையாற்றி தொழுகை நடத்தினார். 

இனவாதிகள் டான் பிரசாத், அமித் வீரசிங்க மற்றும் இரண்டு பிக்குகளுடன் பத்துக்கு உட்பட்டவர்கள் ஆர்பாட்டத்திற்க்கு என்று வருகை தந்த நிலையில் பொலிசார் அவர்களையும் திருப்பியனுப்பினார்கள். 

இனவாதத்தை முறியடித்து சத்தியத்திற்க்கு மீண்டும் வெற்றியை தந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். 

-ஊடகப் பிரிவு,
தவ்ஹீத் ஜமாத் -SLTJ



2 comments:

  1. But jaffna Muslim giving to mor respect to Sltj jaffna Muslim part of out of muslim

    ReplyDelete
  2. Bro. Hubail, I am not a fan of SLTJ. However, to classify them as terrorist is irresponsible, please list their terrorist activities. You have a responsibility towards the honor of your fellow humans. Arguing healthy, but discussion is.

    ReplyDelete

Powered by Blogger.